தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மய்யம்

சென்னை, அக். 25- தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  தீவிர காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெற்றது.

இது  வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது. சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற் றும் சந்திவிப் இடையில் கரையைக் கடந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மித மான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழ் நாடு மாவட்டங்கள் (ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, குமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்( தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரிய லூர், கடலூர்) நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment