கோவை கார் வெடிப்பு தி.மு.க. அரசின் விரைந்த நடவடிக்கை திருமாவளவன் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

கோவை கார் வெடிப்பு தி.மு.க. அரசின் விரைந்த நடவடிக்கை திருமாவளவன் பாராட்டு

சென்னை, அக்.28 கோவை கார் வெடிப்பு நிகழ்வு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தை மறுசீரமைப்பு செய்து அங்கு அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.10.2022)  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். 

அதன்பின்னர் தொல். திருமாவளவன் செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எங்கள் கோரிக்கையை ஏற்று அண்ணல் அம்பேத்கரின் மணி மண்டபத்தை மறுசீரமைத்தும், 13 அடி உயர அம்பேத்கரின் முழு உருவ சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த நன்றி. 

சனாதனம் நிறைந்த பழைய இந்தியாவை தகர்த்து எறிந்து விட்டு சமத்துவம் நிலவும் புதிய இந்தியாவை கட்டமைப்பது அம்பேத்கரின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் திமுகவுடன் ஜனநாயக சக்திகள் இணைந்து களத்தில் இறங்கி இருப்பது பாராட்டுதற்குரியது. கோவை கார் வெடிப்பு நிகழ்வு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக் கும் என காவல்துறை அஞ்சுகிறது. எனவே இந்த விவ காரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதே சரியா னது, பொருத்தமானது. ஆனால், தேசிய புலனாய்வு முகமை சுதந்திரமாக செயல்பட வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங் கரவாதத்தை கையிலெடுப்பது ஏற்புடையது அல்ல. இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத் துழைப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விவ காரத்தை தேசியப் புலனாய்வு முகமை கையிலெடுத்திருக்கும் நிலையில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாஜக கடையடைப்புப் போராட்டம் நடத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகா ரத்தை வைத்து அரசியல் ஆதா யம் தேட அனைத்து முயற்சி களையும் பாஜக மேற்கொள் ளும். தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது.

 கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது. கோவையில் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாடு காவல் துறையின் செயல் பாராட்டு தலுக்குரியது. கடையடைப்பின் மூலம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய் கிறது. கார் வெடிப்பு நிகழ்வை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக்கூடாது. இஸ்லாமிய சமூகம் இந்த நிகழ்வை ஏற்கவில்லை, ஊக்கப் படுத்தவில்லை. பன்னாட்டு இயக்கங்களுடன் தொடர்பு உள்ள இதுபோன்ற வழக்கு களை தேசியப்) புலனாய்வு முகமை விசாரிப்பதே சரியாக இருக்கும்" என்றார்.


No comments:

Post a Comment