அகமதாபாத், அக்.24 குஜராத் பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினரான பால்கிருஷ்ண படேல் நேற்று (23.10.2022) காங்கிரசில் சேர்ந்தார்.
குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினராக பால்கிருஷ்ண படேல் நேற்று காங்கிரசில் சேர்ந்தார்.
அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அதன் மாநில தலைவர் ஜெகதீஷ் தாக்கோர், மேனாள் தலைவர் சித்தார்த் படேல் முன்னிலையில் அவர் இணைந்தார்.
வதோதரா மாவட்டத்தில் உள்ள தாபோய் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினராக பால்கிருஷ்ண படேலுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 'பா.ஜ.க.வுக்காக நான் அர்ப்பணிப்போடு கடினமாக உழைத்தாலும், புறக்கணிக்கப்பட்டேன், ஒதுக்கப் பட்டேன்.
அதனால்தான் அந்தக் கட்சியில் இருந்து விலகி யுள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் வாய்ப்பு எதையும் எதிர்பார்த்து நான் காங்கிரசில் இணைய வில்லை' என செய்தியாளர்களிடம் பேசிய பால்கிருஷ்ண படேல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment