‘‘பூணூல் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால் தி.மு.க. தலைவர்கள் தங்களுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ளவோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ பிராமணர்களிடம் செல்வதே இல்லையா?''
- வானதி சீனிவாசன், பி.ஜே.பி.,
பிரச்சினை டாக்டரா, வழக்குரைஞரா என்பதல்ல. ‘‘பூணூல் போட்டுக் கொள்வதால்தான் இரு பிறப்பாளன் (துவிஜாதி). அதுவே பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்பதற்கான அடையாளம். பூணூல் போடாத மற்றவர்கள் சூத்திரர்கள் - வேசி மக்கள்'' என்கிறது மனுதர்மம்.
‘‘பெண்கள் என்றாலே விபச்சார தோஷம் உடையவர்கள்'' என்றும் கூறுகிறது மனுதர்மம்.
வானதி சீனிவாசன் யாருக்கு வக்காலத்து வாங்குகிறார்? எதற்கு வக்காலத்து வாங்குகிறார்?
பி.ஜே.பி.யில் உள்ள பெண்களின் சுயமரியாதைக்கும் சேர்த்துதான் திராவிடர் கழகம் குரல் கொடுக்கிறது.
சுயமரியாதையுடன் சிந்தியுங்கள்.
- ச.இன்பக்கனி,
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment