கூவிப் பயன் என்ன?
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
>> ஆண்டுதோறும் கூவியும் காரியத்தில் நடக்க வில்லையே!
விசாரணையின் அடுத்த கட்டம்
ஆறுமுகசாமி அறிக்கையை பி.ஜே.பி. ஏற்காது.
- பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை
>> அப்படியென்றால் அண்ணாமலையையும் சேர்த்து விசாரிக்கவேண்டும்.
பரிதாபப் பக்தர்கள்!
சூரிய கிரகணம் வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 11 மணிநேரம் மூடப்படுகிறது.
>> சக்தி சூரியனுக்கா, ஏழுமலையானுக்கா? அந்தோ பரிதாபப் பக்தர்கள்!
தாராளம்தான்
தமிழ்நாட்டுக்கு 529 டி.எம்.சி. நீரை கருநாடகம் வழங்கியுள்ளது.
>> கடுமழை பொழிகிறது அல்லவா! அதனால் அவர்கள் உள்ளமும் தாராள மனப்பான்மையில் குளிக்கிறது.
No comments:
Post a Comment