‘‘ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற - முடியாது எனக் கூறப்பட்ட விஷயங்களை நிறைவேற்றியது மோடி அரசு. எங்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை.''
- இப்படி பேசியிருப்பவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. (‘தினமலர்', 16.10.2022, பக்கம் 10).
உண்மையைச் சொல்லப்போனால், இது சாதனையா - வேதனையா?
எதையும் தலைகீழாகப் புரட்டி, நியாயம்(?) பேசுவதுதான் பி.ஜே.பி., சங் பரிவார்க் கூட்டத்தின் இயல்பும் - பண்பாட்டுச் சீரழிவான செயல்பாடுகளும்!
450 ஆண்டுகால சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்துத் துவம்சம் செய்தவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பதுதான் இவர்களின் இமாலய சாதனை!
எங்களுக்கு முடியாதது எதுவுமில்லை என்று ஒரு உள்துறை அமைச்சர் கூறும் நாகரிகத்தை என்ன சொல்ல!
No comments:
Post a Comment