ஆர்.எஸ்.எஸ். தலைமை நகரமான நாக்பூர் ஊராட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி! காங்கிரஸ் கட்சி அபார வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

ஆர்.எஸ்.எஸ். தலைமை நகரமான நாக்பூர் ஊராட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி! காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!

மும்பை, அக். 17- ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமை ந்து இருக்கும் மகாராட்டிரா மாநில ம் நாக்பூர் மாவட்டத்தில் நடைபெ ற்ற ஊராட் சி தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியடை ந்துள்ளது. பா.ஜ.க.வின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-இன் தலைமையகம் மகாராட்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்து இருக்கிறது. பா.ஜ.க .வின் எந்த ஒரு முடிவையும் நாக்பூரிடம் ஒப்புதல் பெற்றே எடுப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது உண்டு. இப்படிப்பட்ட பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இன் அதிகார பலம் பொருந்திய பகுதியான நாக்பூர் மாவட்டத்தில் ஊராட் சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

காங்கிரஸ் பெரும் வெற்றி

இதில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற் று பலரை வியக்கச் செய்து இருக்கிறது. நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 13 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் 9 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்று உள்ளது. 

நாக்பூர் கிராமின், கம்தி, சவனெர், கலமேஷ்வர், பர்ஷிவானி, உம்ரெட், மௌடா, குஹி, பிவாபூர் ஆகிய இடங்களில் கா ங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. என்.சி.பி, சிவசேனா, சரத்ப வாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 3 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் வெற்றியை பதிவு செய்து உள்ளன. அந்த கட்சிகள் நார்கெட் மற்றும் கடோல் ஆகிய இடங்களில் வென்று இருக்கிறது.

மகாராட்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா 13 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் போட்டியிட்டு ராம்டெக் என்ற ஒரு இடத்தில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.

பா.ஜ.க. படுதோல்வி

ஒன்றியத்தில் ஆளும் கட்சியாகவும், மகாராட்டிராவில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றும் உள்ள பாரதிய ஜனதா அனைத்து இடங்களிலும் தோல்வியை த் தழுவி இருக்கிறது. அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவர்களாக இருந்த குஹி மற்றும் கம்தி ஆகிய இடங்களையும் இம்முறை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிட்ட நாக்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சந்திரசேக ர் பவன்குல்லேவும் படுதோ ல்வியை தழுவியுள்ளார். ஒரு தலைவர் பதவியைக் கூட கைப்பற்றாத அக்கட்சியினர் 2 இடங்களில் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மறுபக்கம் தொடர் தோல்வியை தழுவி வந்த காங்கிரஸ் கட்சி இதில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று இருக்கிறது. 

பா.ஜ.க. - ஷிண்டே அணிக்கு நெருக்கடி! 

மகாராட்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை குதிரை பேரம் மூலம் உடைத்த பாஜக, சிவசேனா அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியை உருவாக்கி, உத்தவ்தாக்கரே அரசை கவிழ்த்து, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த நிலையில் நாக்பூர் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க .வுக்கும் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.


No comments:

Post a Comment