கொலீஜியம் அளித்த பரிந்துரைகளை ஏற்ற மோடி அரசு நீதிபதி எஸ்.முரளிதர் நியமனத்தை மட்டும் நிறுத்தி பழி வாங்கியுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

கொலீஜியம் அளித்த பரிந்துரைகளை ஏற்ற மோடி அரசு நீதிபதி எஸ்.முரளிதர் நியமனத்தை மட்டும் நிறுத்தி பழி வாங்கியுள்ளது

புதுடில்லி,அக்.14- ஒடிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி  எஸ். முரளிதரை சென்னை உயர்நீதிமன் றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு நரேந்திர மோடி அரசு - எதிர்பார்த்ததைப் போலவே மறுப்பு தெரிவித்துள்ளது. முரளி தரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு கொலீஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைத்துள்ளது. கருநாடகா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு -_ காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி புதிய பரிந்துரைகளை அளித்து இருந்தது.

ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், ராஜஸ்தான் மாநில  தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதி மன்ற நீதிபதி ஜஸ்வந்த், ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை  உயர்நீதி மன்ற நீதிபதி பி.பி. வராலே, கருநாடக மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி அலி மொகமத் மார்கிரே, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். மேலும் உத்தரகண்ட் உயர்நீதி மன்ற நீதிபதி  சஞ்சய் குமார் மிஸ்ரா, ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்திற்கும், கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரன், மும்பை உயர்நீதிமன்ற நீதிமன்றத்திற்கும், ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அபரேஷ்குமார் சிங் திரி புரா மாநில உயர்நீதிமன்றத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். 

இந்த பரிந்துரைகளுக்கு செவ் வாயன்று ஒப்புதல் வழங்கிய நரேந்திர மோடி அரசு, ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். முரளிதரை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து வழங்கிய பரிந்துரையை மட்டும் ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளது. முன்பு ஒருமுறை, நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்திற்கு கொலீஜியம் பரிந்துரை செய்த போது, ஒன்றிய அரசு அதனை ஏற்காமல் பிடிவாதம் காட்டியது. இது நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒருவழியாக அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள் ளப்பட்டது.  இந்நிலையில்தான், ஒன்றிய பாஜக அரசானது, மீண் டும் நீதிபதி எஸ். முரளிதர் பணியிட மாற்ற விவகாரத்தில் கொலீ ஜியம் முடிவோடு முரண்பட்டு, நியமனத்தை நிறுத்தி வைத் துள்ளது.

அரசின் தவறைச் சாடிய நீதிபதி

கடந்த 2020-ஆம் ஆண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டில்லியில் முஸ்லிம்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரத்தை சேர்ந்த கும்பல் டில்லி முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இதில் 54 அப்பாவிப் பொதுமக்கள் பலியா கினர்.  எனினும், இந்த வன்முறைக்கு காரணமான இந்துத்துவா மற்றும் பாஜக தலைவர்கள்மீது ஒன்றிய அரசின் உள்துறை கட்டுப்பாட்டி லுள்ள டில்லி காவல்துறை நட வடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தது. அப்போது இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ். முரளிதர்,  டில்லி காவல்துறையை கையில் வைத் திருக்கும் ஒன்றிய அரசை நேரடி யாக கடுமையாக சாடினார். 

1984-ஆம் ஆண்டு போன்ற மற்றொரு நிகழ்வை இந்த நாட்டில் நடக்க அனுமதிக்க முடியாது என்று காட்டமாக கூறிய அவர், பாஜக  ஒன்றிய அமைச்சர் அனு ராக் தாக்குர், டில்லி  பாஜக தலை வர்கள் பர்வேஷ் வர்மா, அபய் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகி யோர்மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

இது ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலை யில், தீர்ப்பளித்த அன்றே, இர வோடு இரவாக நீதிபதி எஸ். முரளிதர் பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டார். டில்லி பார் அசோசி யேசன் இந்த இடமாற்றத்தை கடுமையாக விமர்சித்தது. டில்லி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தைப் புறக் கணித்துப் போராட்டம் நடத் தினர். பன்னாட்டு வழக்குரை ஞர்கள் குழு, நரேந்திர மோடி அரசின் பழிவாங்கல் குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது.

 நீதிபதியின் இட மாற்றம் வழக்கமானது என்றும், பிப்ரவரி 12 ஆம் தேதியே, அவரைப் பணியிட மாற்றம் செய்ய உச்சநீதி மன்ற கொலீஜியம் பரிந்துரை அளித்திருந்ததாகவும், அதன் படியே நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதாக வும் சமாளித்தது. 

ஆனால், டில்லி வழக்குரைஞர் சங்கம், எஸ்.முரளிதர் போன்றவர் களின் இடமாற்றங்கள் எங்களின் உன்னதமான வழக்குரைஞர் பணிக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுவான மக்களின் நம்பிக்கையை சிதைக் கும் வகையில் உள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர். எனினும் மோடி அரசு அந்த எதிர்ப்புகளை வழக்கம்போல புறந்தள்ளி விட்டது.  நீதிபதி எஸ்.முரளிதரும், கடந்த 2 ஆண்டுகளில் பஞ்சாப் - அரியானா  உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி விட்டு, தற்போது ஒடிசா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக பதவியை வகித்து வந்தார்.  இந்நிலையிலேயே, காலி யாக இருக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி  இடத் திற்கு நியமனம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந் துரை செய்தது. அப்போதே மோடி அரசு இந்த பரிந்துரையை ஏற்குமா? என்று பல்வேறு தரப் பினரும் சந்தேகம் எழுப்பினர். அதன் படியே, செப்டம்பர் 28-ஆம் தேதி  கொலீஜியம் அளித்த ஏனைய பரிந்துரைகளுக்கு ஒப் புதல் அளித்துள்ள ஒன்றிய நரேந்திர மோடி அரசு, நீதிபதி டாக்டர் எஸ். முரளிதரை சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. இது மறு படியும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment