தென்சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

தென்சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்  சைதாப்பேட்டை மு.ந.மதியழகன் இல்லத்தில் உற்சாகமாக நடைபெற்றது. மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம்,  மண்டல செயலாளர்  தே.செ.கோபால்,  மத்தூர் நிலவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கி சிறப்பித்தனர். அறிவாசான் தந்தைபெரியார் பிறந்தநாள்விழா, "ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோஜன்குதிரை" நூல் அறிமுகவிழா நடத்துவது என்றும், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயர்நகர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலை சந்தாக்களைத் திரட்டி  தமிழர் தலைவர் அவர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (15.10.2022)


No comments:

Post a Comment