ஜாதியும் வருணமும் - அழித்தொழிக்கப்பட வேண்டியவை திருமாவளவன் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

ஜாதியும் வருணமும் - அழித்தொழிக்கப்பட வேண்டியவை திருமாவளவன் கருத்து

சென்னை,அக்.10- "ஜாதியும் வருணமும் மறந்துவிடக் கூடி யவை அல்ல, அழித்தொழிக்கப் பட வேண்டியவை" என - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ‘ஜாதி, வருணம் என்பவை யெல்லாம் இறந்தகால விவ காரங்கள் என்றும், அவற்றை மறந்துவிட்டு கடந்து செல் வோமென்றும் அண்மையில் கூறியிருக்கிறார். அவர் கூறு வது மிகப்பெரிய நகைப்புக் குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறேதுமில்லை என்பதாக உள்ளது. இந்திய சமூகம் அல்லது இந்து சமூகம், ஜாதி, வருணம் ஆகிய இரண் டையும் தவிர்த்துவிட்டு இயங்கவே முடியாது. அந்த அளவுக்கு அவையிரண்டும் இந்தச் சமூகத்தின் அடிமுதல் நுனி வரையில் பரவி அதன் உயிரியக்கமாகவே விளங்கு கிறது. 

எனவே, தாங்கள் கூறு வதைப்போல ஜாதியும் வரு ணமும் மறந்துவிடக் கூடி யவை அல்ல, வேரோடு கில்லி எறிந்து முற்றாக அழித் தொழிக்கப்பட வேண்டியவை. இதனை உணர்ந்து ஒப்புக் கொண்டு ஜாதியை- வரு ணத்தைச் சிதைப்பதற்கு, எச்ச சொச்சமும் இல்லாத அள வுக்குத் துடைத்தெறிய அதற்கென போராட முன் வாருங்கள்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment