திருக்குறள் ஆன்மிக நூலா? ஆளுநருக்கு கே.எஸ். அழகிரி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

திருக்குறள் ஆன்மிக நூலா? ஆளுநருக்கு கே.எஸ். அழகிரி கண்டனம்

சென்னை, அக்.9 திருக்குறளை ஆளுநர் சரியான பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி "நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள்" என்று சொல்லி இருக்கிறார். ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆன்மிகம் என்பது மதத்தில் இருந்து அப்பாற்பட்டது. இதைத் திருவள்ளுவர் மிக நன்றாக அறிந்து தன்னுடைய திருக்குறளை அமைத்திருக்கிறார். அதில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ, மன்னர்களைப் பற்றியோ அல்லது அன்று வாழ்ந்த வள்ளல் களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.  நீங்கள் புரிந்து கொண்டிருக்கிற ஆன்மிகம் என்பது ஏதாவது ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண் டிருக்கிறது. நீங்கள் வேறு மொழிக்காரர் என்ற காரணத் தினால் திருக்குறளை அறிந்து கொள்கிற உங்கள் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது. 

ஆனால், ஒரு சரியான பார்வையில் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment