இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்கு அவர் களின் தேர்தல் வாக்குறுதிகளின் நிதி, நம்பகத்தன்மை குறித்து உண்மையான தகவல்களை வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது இது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல என காங்கிரஸ் பதிலடி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உலகளாவிய மந்தநிலை அபாயங்கள் அதிகரித்து வருகிறது, உலகம் ஆபத்தான புதிய இயல்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என அய்.எம்.எப். தலைவர் ஜார்ஜீவா கூறுகிறார்
தி டெலிகிராப்:
* மோடி அரசின் உயர்ஜாதி வருமானம் குறைந் தோர்க்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, ஆதிக்க ஜாதிகளில் உள்ள வருமானம் குறைந்தோர்க்கு மட்டுமே என்கிறது தலையங்க செய்தி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment