நல்ல உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் கூர்மையாக வைத்திருக்கும் என்று பன்னாட்டு ஓட்டப்பந்தய மேனாள் வீராங்கனையும், ஒன்றிய அரசு அதிகாரியு மான ஷைனி வில்சன் கூறினார்,
பிஅய்எஸ் எனப்படும் ஒன்றிய அரசின் இந்திய தர நிர்ணய அமைப்பின் 75-ஆம் ஆண்டு மற்றும் உலக தரநிலைகள் நாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைக்கவும், பிரச்சினைகள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிவைப் பரப்பவும்; இது போன்ற சிறு நடை - ஓட்டம் ஒரு நல்ல கருவியாக அமைகிறது என்றார். தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண் டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அதன் தென் மண்டல அலுவலகம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் ஹால்மார்க்கிங் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணத்தை நடத்தியாக ஙிமிஷி துணை தலைமை இயக்குநர் யாதவ் கூறினார்.
No comments:
Post a Comment