காங்கிரஸ் தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே பெருவெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

காங்கிரஸ் தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே பெருவெற்றி!

புதுடில்லி,அக்.20- காங்கிரஸ் கட்சி யின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள  மல்லிகார்ஜுன கார்கே வுக்கு சோனியா காந்தி.பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லி கார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிட்டனர். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கத் தகுதி பெற்ற 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 96 விழுக்காட்டினர் வாக்களித்தனர். நேற்று (19.10.2022) காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இத்தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் புதிய தலை வராக மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அறிவித்தார். கார்கே வரும் 26ஆம் தேதி பொறுப் பேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரன்தீப் சுர்ஜேவாலா அறிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள சசிதரூர், ‘‘கட்சி நிர்வாகிகள் ஆயிரத் துக்கும் மேற்பட்டோரின் ஆதரவு கிடைத்தது எனது ஒரு வாய்ப்பு" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கட்சி நிர்வாகிகளின் முடிவை தாழ்மையுடன் ஏற்கிறேன். மல்லிகார்ஜுன கார்கேவின் வழிகாட்டுதலின் கீழ், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஆந்திராவில் தேசிய ஒற்றுமை நடைப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தியிடம், கட்சியில் புதிய தலைவரின் பங்கு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘காங்கிரஸ் கட்சித் தலைவரின் பங்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அதுபற்றி கார்கேதான் கூறமுடியும். கட்சியில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், கார்கேதான் தீர்மானிப்பார்’’ என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே செய்தியா ளர்களிடம் கூறும்போது, "பழம் பெரும் கட்சிக்காக, வாழ்வைத் தியாகம் செய்த சோனியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தியுடன் இணைந்து பணியாற்றுவேன்" என்றார்.

சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கே, அரசியலில் 50 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். கருநாடகாவிலிருந்து நிஜலிங் கப்பாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் கார்கே, ஜெகஜீவன் ராமுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவராகும் 2ஆவது தாழ்த்தப்பட்ட சமூகத்  தலைவராவார். இவர் குர்மித்கல் தொகுதியிலிருந்து 9 முறை சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர். கருநாடக காங்கிரஸ் தலைவராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந் தார். இவருக்கு முதலமைச்சர் பதவி 4 முறை கைநழுவியது.

1969இல் காங்கிரஸில் சேர்ந்த இவர், 40 ஆண்டுகள் சட்டமன்ற தலைவராக இருந்தபின், 2008இல் தேசிய அரசியலுக்கு நகர்ந்தார். 2014 மக்களவைத் தேர்தல் வரை அவர் தோல்வியை சந்திக்கவில்லை. மன் மோகன் சிங் அமைச்சரவையில் ரயில்வே, தொழிலாளர் நலம், சமூக நலத் துறை அமைச்சராகப் பணி யாற்றினார். 2019 மக்களவைத் தேர்த லில்தான் முதல்முறையாக தோல் வியைச் சந்தித்தார்.

இதையடுத்து, அவரை சோனியா காந்தி, 2020இல் மாநிலங்களைவை உறுப்பினராக்கி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலும் அமரச் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை தீவிர மாக விமர்சிப்பவர் கார்கே. அடுத்த ஆண்டு கருநாடகாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசுக்கு இவர் தலைமை ஏற்பது, கருநாடக காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம், நம்பிக்கையை அளித்துள்ளது. இவரது 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கட்சியின் வளர்ச் சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘காங்கிரசின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள கார்கேவுக்கு எனது வாழ்த்துகள். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக இருக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment