அய்தராபாத் விழாவில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான எருமைக்கு பெருமை; ‘கோமாதா'வுக்கு ஏமாற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

அய்தராபாத் விழாவில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான எருமைக்கு பெருமை; ‘கோமாதா'வுக்கு ஏமாற்றம்!

அய்தராபாத்,அக்.28- அய்தராபாத்தில் நடைபெற்ற ‘சதர்' விழாவில் ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை பங்கேற்றது. தெலங் கானா மாநில தலைநகர் அய்தராபாத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற ‘சதர்' எனப்படும் விழாவிற்கு விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமை யாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த விழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப் பட்டது. இதற்காக அய்தராபாத்தைச் சேர்ந்த மது என்பவர் தலைமையில் நகராட்சி மைதானத்தில் உழவர் காட் சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சதர் விழாவில் பங்கேற்பதற்காக எருமை மாடுகளை வாங்கி, மது அவரது பால் பண்ணையில் வளர்த்து வருகிறார். இதில், மதுவின் ‘கருடன்’ என்ற எருமை சிறப்புக் கவனம் பெற்றது. 20 நாட் களுக்கு முன்பு அரியானாவைச் சேர்ந்த அய்மத் ஆலம்கானிடம் இருந்து ரூ.35 கோடி கொடுத்து இந்த 4 வயதான கருடன் எருமையை அவர் வாங்கியுள் ளார். தற்போது அதனை அய்தராபாத் திற்குக் கொண்டு வந்துள்ளார். இதே போல், அவரிடம் 10 எருமைகள் இருக் கின்றனவாம்.

இந்த எருமைகளின் விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய் யப்படுகிறது.

கருடன் எருமையின் விந்தின் ஒரு துளி ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற் பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம், இந்த பகுதியில் எரு மைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இந்த எருமைகளுக்கு பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழி முட்டை, கொண்டைக்கடலை, கட லைப் பருப்பு, வெந்தய விதைகள், வேர்க்கடலை, குஜார், பீட்ரூட் ஆகிய வைதான் உணவாக அளிக்கப்படு

கின்றனவாம்.

எருமை மாட்டுக்கு உள்ள பெருமை ‘‘கோமாதா''வுக்கு இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment