இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 5- 2022ஆம் ஆண்டு இயற்பியலுக் கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியா வின் ஷிலிங்கருக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படு கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற் பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படு கிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டு இயற்பியலுக் கான நோபல் பரிசு நேற்று (4.10.2022) அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங் கருக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. சிக்கலான ஃபோட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment