ஆந்திராவில் பயங்கரம் பட்டாசு கடைகளில் தீ விபத்து 2 ஊழியர்கள் உடல் சிதறி பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

ஆந்திராவில் பயங்கரம் பட்டாசு கடைகளில் தீ விபத்து 2 ஊழியர்கள் உடல் சிதறி பலி

திருமலை, அக். 24- ஆந்திரா வில் நேற்று (23.10.2022) காலை பட்டாசு கடை களில் ஏற்பட்ட தீ விபத் தில் ஊழியர்கள் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் உள்ள ஜிம் கானா மைதானத்தில் தீபாவளி பண்டிகை யொட்டி 20க்கும் மேற் பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

நேற்று காலை ஒரு கடையில் திடீரென ஏற் பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. 

மேலும் அருகில் அடுத்தடுத்து இருந்த 15, 16, 17 எண்கள் கொண்ட கடைகளுக்கும் தீ பரவி யது. இதில் 4 கடைகளி லும் தீப்பிடித்து பட்டாசு கள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் 15ஆம் எண் கடையில் வேலை பார்த்த பிரம்மா, காசி ஆகிய 2 ஊழியர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும், 4 கடைகளிலும் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சேதமானது. அப்போது பட்டாசு வாங்க வந்த வர்கள் மற்றும் அவ் வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவ லறிந்த தீயணைப்பு துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மற்ற கடைகளுக்கு பரவா மல் தடுத்தனர். தீப் பிடித்து எரிந்த பட்டாசு கடையின் அருகே பெட் ரோல் பங்க் உள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முத லில் தீப்பிடித்த பட்டாசு கடைக்கு மாலை தான் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது. 

ஆந்திர மாநிலம் சித் தூர் மாவட்டம் வடமா லைபேட்டையில் வைக் கப்பட்டிருந்த பட்டாசு கடையில் நேற்று முன் தினம் இரவு 11 மணியள வில் திடீரென தீப்பிடித் தது. தகவலறிந்த தீய ணைப்புத் துறையினர், காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த னர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப் புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியிருக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment