குஜராத் தொங்குபாலம் அறுந்து 150-க்கும் மேற்பட்டோர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

குஜராத் தொங்குபாலம் அறுந்து 150-க்கும் மேற்பட்டோர் பலி

அகமதாபாத்,அக்.31- குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

சுற்றுலாத் தலமான இங்கு நேற்று (30.10.2022) 500-க்கும் மேற்பட்டோர் திரண் டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற் றில் விழுந்தனர்.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர் என்றும் குஜராத் தகவல் தொடர்புத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. மேலும், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment