கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்ற ஊரில், நேற்று (14.9.2022) தந்தை பெரியார் பெயரில் உணவு விடுதி திறக்கும் ஏற்பாடுகளை தோழர் பிரபாகரன் குடும்பத்தினர்கள் செய்த நேரத்தில், சில காவிகள் - ஹிந்து முன்னணியினர் அந்த உணவு விடுதியைத் திறக்கும் முன்பே அடித்து உடைத்து, உரிமையாளரையும் காயப்படுத்தியுள்ளது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது. திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றதால், இதுவரை சுமார் 8 பேர் - காவிகள் - கைது செய்யப்பட்டு, கிரிமினல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு இப்படி வன்முறை கலவரத்தை இந்தப் பகுதியில் உருவாக்கி வருகின்ற நபர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டால்தான் அமைதி நிலவும்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2022
No comments:
Post a Comment