காரமடையில் பெரியார் உணவு விடுதி கா(லி)விகளின் தாக்குதல் வன்முறையின் மூலவர்கள்மீது நடவடிக்கை தேவை தமிழர் தலைவர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

காரமடையில் பெரியார் உணவு விடுதி கா(லி)விகளின் தாக்குதல் வன்முறையின் மூலவர்கள்மீது நடவடிக்கை தேவை தமிழர் தலைவர் அறிக்கை

கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்ற ஊரில், நேற்று (14.9.2022) தந்தை பெரியார் பெயரில் உணவு விடுதி திறக்கும் ஏற்பாடுகளை தோழர் பிரபாகரன்  குடும்பத்தினர்கள்  செய்த நேரத்தில், சில காவிகள் - ஹிந்து முன்னணியினர் அந்த உணவு விடுதியைத் திறக்கும் முன்பே அடித்து உடைத்து, உரிமையாளரையும் காயப்படுத்தியுள்ளது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது. திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றதால், இதுவரை சுமார் 8 பேர் - காவிகள் - கைது செய்யப்பட்டு, கிரிமினல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு இப்படி வன்முறை கலவரத்தை இந்தப் பகுதியில் உருவாக்கி வருகின்ற நபர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டால்தான் அமைதி நிலவும்.

- கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.9.2022



No comments:

Post a Comment