மகத்தான மனிதநேயம் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

மகத்தான மனிதநேயம் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை

தருமபுரி,செப்.29- தருமபுரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், சிறுநீரகத்தை கொடையாக பெற்றோர் வழங்கியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா இணையரின் மூத்த மகன் திவாகர். இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23.9.2022 அன்று ஜோலார் பேட்டையில் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் திவாகரன் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் திவாகரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திவாகர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து திவாகரன் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க அவரின் பெற்றோர் முடிவு செய்தனர். 

பின்னவர் திவாகரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டது.  திவாகரின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகன் உயிருடன் இல்லை என்றாலும், அவனுடைய உடல் உறுப்புகள், உயிரோடு இருப்பவர்களுக்கு, உயிர் வாழ உதவட்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் விபத்துகளில் மூளைச் சாவு ஏற்படுகின்றவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக பெற அரசு முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment