புதுடில்லி, செப்.29 காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோ ணியை சோனியா நேற்று (28.9.2022) திடீரென சந்தித்து பேசினார் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை யுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
கட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கி யுள்ளதாக தெரிகிறது. அதே நேரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர், அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதற்கிடையே மத்திய பிரதேச மேனாள் முதல்- அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஏ.கே.அந் தோணியை, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது, நடைபெற உள்ள கட்சித் தலைவர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்தலில் களமிறங்க சாத்தியமுள்ள வேட்பாளர்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரி கிறது.
இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதாக கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment