செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின, வார, மாத, வருடாந்திர உற்சவங்கள் நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், சேவைகள் நடப்பது விசேஷம்.
சிந்தனை: இவை எல்லாம் எதற்காகவாம், சுவாமி கேட்டதா? ஆசாமிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான ஏற்பாடுகள் தானே! பக்தி ஒரு வணிகம் ஆகிவிட்டது என்று ஜெயேந்திர சரஸ்வதி கூறியது மிகவும் சரியானதே!
1978 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் என்ன பேசினார்?
"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோவில்களுக்குப் போவதையும் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (Fashion) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது. என்று பேசவில்லையா?
No comments:
Post a Comment