முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது துணைவியாரும், கவிஞர் கனிமொழி கருணாநிதியின் தாயாருமான திருமதி ராசாத்தி அம்மாள், ஜெர்மனிக்குச் சென்று சிகிச்சை பெற்று உடல் நலத்துடன் ஒரு வாரம் முன்பு சென்னை திரும்பினார். இன்று காலை (20.9.2022) சி.அய்.டி. காலனியில் உள்ள கவிஞர் கனிமொழி கருணாநிதி இல்லத்தில் அவரைச் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அவரது வாழ்விணையர் திருமதி வீ. மோகனா ஆகியோர் திருமதி ராசாத்தி அம்மாள் உடல் நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடித் திரும்பினர்.
கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் உடன் இருந்து வரவேற்று உபசரித்தார்.
No comments:
Post a Comment