பள்ளிகளில் ஜாதி பார்வையா? அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

பள்ளிகளில் ஜாதி பார்வையா? அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!

சென்னை,செப்.20- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த நிகழ்வு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழ் நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். ஜாதிய பாகு பாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment