இந்திய துறைமுகங்கள் திருத்த வரைவு மசோதா மாநில உரிமைப் பாதிப்பா? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

இந்திய துறைமுகங்கள் திருத்த வரைவு மசோதா மாநில உரிமைப் பாதிப்பா? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,செப்.23- இந்திய துறை முகங்கள் திருத்த வரைவு மசோதாவில், கடல்சார் மாநிலங்களின் உரிமைகளை பாதிப்பதாக இருக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் நேற்று  (22.9.2022) எழுதியுள்ள கடிதம்: இந்திய துறைமுகங்கள் தொடர்பான திருத்தப்பட்ட வரைவு மசோதாவில், கடல்சார் மாநில அரசுகள், இதர பங்குதாரர்களின் கருத் துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருந் தாலும், இதில் மாநில அரசுகள் சிறப்பாக நிர்வகிக்கும், துறைமுகங்களின் அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு அனுப வங்கள் பெரிய அளவில் புறக்கணிக் கப்படுவதாக அச்சம் ஏற்படுகிறது.

தனியார் முதலீடுகளை அனுமதிப் பது, தொழில் தொடங்க உகந்த கொள்கைகளை கொண்டுள்ளதால், கடல்சார் மாநிலங்கள் நிர்வகிக்கும் சிறிய துறைமுகங்கள், ஒன்றிய அரசு நிர்வகிக்கும் பெரிய துறைமுகங்களை விட அதிகவளர்ச்சியை பெற்றுள்ளன. குறிப்பாக, குஜராத், தமிழ்நாடு, ஆந்திராஆகிய மாநிலங்கள் சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி, கடல்சார் சரக்கு கையாள்வதிலும் பங்களிக் கின்றன. ஆனால், சிறு துறைமுகங்களை மய்யப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரைவு மசோதா, மாநில அரசு களின் முயற்சிகளை செயலற்ற தாக்கி விடும்.

இதில், கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலை சிறு துறைமுகங்களுக்காக அமைப்பதுதான் முக்கியமான மாற்றம். அந்த கவுன்சில் தற்போது ஆலோ சனைகளை மட்டுமே வழங்கி வருகிறது. அதை,நிரந்தர பணியாளர்கள் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றுவது, மாநில அரசின் அதிகா ரங்களை ஆக்கிரமிப்பதாக உள்ளது. இது, சிறு துறைமுகங்களின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும், இந்த கவுன்சிலுக்கு கடல்சார் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், 5 செயலர்கள், ஒன்றிய அரசின் ஒரு இணை செயலர் நியமிக் கப்படும் நிலையில், துறைமுகத்தின் செயலராக உள்ள மாநிலஅரசு அதிகாரி சேர்க்கப்படவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சில்போல, இந்த கவுன்சிலும், மாநில அமைச்சர்களை உறுப்பினர்களாகவும், அதிகாரிகளை சிறப்பு அழைப்பாளர்களாகவும் கொண்ட ஆலோசனை அமைப்பாகவே செயல்பட வேண்டும். இதுதவிர, கடல்சார் மாநிலங்கள், அவற்றின் கடல்சார் வாரியங்களின் அதிகா ரங்களை ஆக்கிரமிக்கும் இந்த மசோ தாவின் சட்டப்பிரிவுகளை கடுமையாக எதிர்க்கிறோம்.

மாநில கடல்சார் வாரியங்களின் உத்தரவுகளுக்கு எதிரான மேல் முறையீட்டு அதிகாரம் தற்போது மாநில அரசுகளிடம் உள்ளது.அதே நேரம் வரைவு மசோதாவின்படி, இந்த மேல்முறையீட்டு அதிகாரமானது பெரிய துறைமுகங்களுக்காக ஒன்றிய அரசால் உருவாக்கப்படும் தீர்ப்பாயங் களுக்கு சென்றுவிடும். இது மாநில துறைமுகங்கள் தொடர்பான அதிகாரங்களை பாதிக்கும். எனவே, கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் தொடர்பாக திருத்த வரைவு மசோ தாவில் கூறப்பட்டுள்ள பாகங்கள் 2, 3 ஆகியவற்றை முழுமையாக நீக்குவ துடன், இந்த கவுன்சில் ஒரு ஆலோசனை அமைப்பாகவே முன்பிருந்தபடியே செயல்பட வேண்டும். மாநில கடல்சார் வாரியங்கள் தொடர்பான பாகம் 5-அய் முழுமையாக நீக்க வேண்டும்.

இந்திய துறைமுகங்களுக்கு குறைந்த மய்யப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதலே போதுமானது. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, பெரியவையல்லாத துறை முகங்களின் தொடர் வளர்ச்சியை உறுதி செய்யவும், மாநிலங்களின் வர்த் தகத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment