தமிழ்நாட்டில் புதிதாக 522 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 522 பேருக்கு கரோனா

சென்னை, செப்.23 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 522- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நேற்றைய (22.9.2022)  கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 248 ஆண்கள், 274 பெண்கள் என மொத்தம் 522 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 53 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

 மேலும், 12 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 101 முதியவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மருத்துவமனையில் 445 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 233 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment