தொண்டறத்தால் உயர்ந்து மறைந்தும் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும் "டத்தோ" துன் ச.சாமிவேலு அவர்களுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

தொண்டறத்தால் உயர்ந்து மறைந்தும் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும் "டத்தோ" துன் ச.சாமிவேலு அவர்களுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் வீரவணக்கம்!

திருச்சி, செப். 19- தமிழினத் தின் புகழை மலேசியாவில் நிலை நாட்டி அங்கு மதிப் பிற்குரிய பொதுப்பணித் துறை அமைச்சராக திகழ்ந்து பல்வேறு தொண் டறப்பணிகளை செய்த மாண்பாளர் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நன்றிக்கு உரியவர் அய்யா டத்தோ துன் ச.சாமிவேலு அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானோம்.

அய்யா அவர்களின் அறக் கொடையால் பெரியார் மருந்தியல் கல்லூரியில் 'டத்தோ' எஸ். சாமிவேலு - இந்திராணி கூடம் பல மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வுக் கூடமாக 38ஆண்டுகள் கடந்தும் வேரூன்றி நிற்கின் றது. அய்யா அவர்கள் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களுடன் வருகை புரிந்த நேரத்தில் நம்மிடையே உரை யாடிய விதமும், சிரித்த முகமும் அனைவ ரின் இதயங்களிலும் இன் றும் நீங்காது இடம்பிடித் திருக்கின்றது. மலேசியா வில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட் டில் அய்யா அவர்களை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சந்தித்த போது பெரியார் கல்விக் குழு மங்களின் மீது அவர் கொண்ட மாறாப்பற்றை அறிய முடிந் தது. தமிழர் களின் அறிமுகமாக மலே சியாவில் பெருமையுடன் திகழ்ந்த டத்தோ துன் ச. சாமி வேலு அவர்களின் மறைவு ஈடு செய்ய முடி யாத பேரிழப்பு.

அவர்களை இழந்து வாடும் அவரது வாழ்வி ணையர் "டத்தின்" திருமதி இந்திராணி அம்மா, பிள் ளைகள் மற்றும் குடும்பத் தினர் அனைவருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்ப தோடு அய்யா அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment