தடுப்பூசி முகாமில் 8.17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

தடுப்பூசி முகாமில் 8.17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை, செப்.19- தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் நேற்று 37ஆவது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இதுவரை நடந்த 36 மெகா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 35 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளது. 12-14 வயதுக்குட்பட்டவர்களில் இதுவரை முதல் தவணையாக 19 லட்சத்து 86 ஆயிரத்து 409 பேருக்கும் (93.65 விழுக்காடு), 2ஆம் தவணையாக 15 லட்சத்து 66 ஆயிரத்து 176 (73.84 விழுக்காடு) பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 15-17 வயதுக்குட்பட்ட வர்களில் இதுவரை முதல் தவணையாக 30 லட்சத்து 

53 ஆயிரத்து 610 பேருக்கும் (91.26 விழுக்காடு), 2ஆம் தவணையாக 25 லட்சத்து 95 ஆயிரத்து 960 பேருக்கும் (77.58 விழுக்காடு) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 86 லட்சத்து 

6 ஆயிரத்து 640 பேருக்கு (20.20 விழுக்காடு) இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று  (18.9.2022) நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 8 லட்சத்து 17 ஆயிரத்து 276 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 28 ஆயிரத்து 285 பேருக்கும், 2ஆம் தவணையாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 73 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி என்ற வகையில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 918 பேருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 96.54 சதவீதமும், 2ஆம் தவணையாக 91.37 சதவீதமும் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமினை முன்னிட்டு இன்று  கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment