Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்
September 22, 2022 • Viduthalai

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்ட தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச் சையின் தோற்றம் ஏற்கெனவே கருதி யிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கலான அறுவை சிகிச் சைக்கு பின்னர் அந்த இளைஞர், பல ஆண்டுகள் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் உடலை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் மெலண்ட்ரி வோல்க், மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் போர்னியோ வின் கிழக்கு கலிமந்தனில் உள்ள லியாங் டெபோ உள்ள குகையில் இந்த கல்லறை தோண்டப்பட்டுள்ளது. இந்த குகையில் உலகின் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல் கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் டிம் மலோனி பழங்கால எலும்புகளை ஆராய்ச்சி செய்வது உற்சாகத்தையும் அச்சத்தையும் ஒரே நேரத்தில் தருவ தாகக் கூறினார்.

பழங்கால இளைஞரின் உடல் பற்றி நேச்சர் இதழ் வெளியிட்டுள்ள விரி வான ஆய்வுக் கட்டுரையில், இந்த அறுவை சிகிச்சை - இளைஞர் குழந் தையாக இருந்தபோது நடந்ததாக தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக் குப் பின் ஆறு முதல் ஒன்பது ஆண் டுகள் வரை அந்த இளைஞர் உயிரு டன் இருந்திருக்கலாம் என்றும், பின் னர் பதின்ம அல்லது இருபது வயதில் அவர் இறந்து இருக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"நாங்கள் மிகவும் கவனமாக இந்த படிமங்களை ஆராய்ச்சி செய்தோம். அப்போது இளைஞரின் இடது கால் எலும்புகள் காணாமல் பொய் இருப் பதை காண முடிந்தது. மீதமுள்ள எலும்புகளின் எச்சங்களை ஆராய்ச்சி செய்தோம். அவை அனைத்தும் மிக வும் அசாதாரணமானவை" என்று பிபிசி செய்தியாளரிடம் டாக்டர் டிம் மலோனி தெரிவித்தார். அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ முறைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆராய்ச்சி ஏற்படுத்திய உற்சாகத்தில் நாங்கள் உள்ளோம்.

சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் வோல்க்-கிடம், இந்த பகுதியிலுள்ள எலும்புகளின் எச்சங் களை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

இதுகுறித்துப் பேசிய அவர் "இது மகிழ்ச்சியும், சோகமும் நிறைந்தது. ஏனென்றால், இது ஒரு மனிதருக்கு நேர்ந்திருக்கிறது." என்றார்.

"31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய எலும்புகள் இவை. இளைஞர் குழந்தையாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப் போது அந்த இளைஞர் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பார் என்பதை உணர முடிகிறது"

இது மதச் சடங்கு அல்லது பலி கொடுப்பது ஆகியவையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய டாக்டர் மலோனி, இது ஒரு அறுவைச் சிகிச்சை என்று தொல்லியல் ஆய்வாளர் நம்புவ தாகத் தெரிவித்தார். "காயத்தில் இருந்து மீட்கப்பட்ட மனிதன் வாழ்நாள் முழுவதும் அக்கறையுடன் பராமரிக்கப் பட்டதை பார்க்க முடிகிறது" என்றார் அவர்.

டர்காம் பல்கலைக்கழக தொல் பொருள் ஆய்வாளர் பேராசிரியர் சார் லோட் ராபர்ட்சன் எலும்புகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், மருத்துவமும், அறுவை சிகிச் சையும் மிக தாமதமாக வந்தது என்ற கருத்துக்கு இந்தக் கண்டுபிடிப்பு சவால் விடுவதாகத் தெரிவித்தார்.

நமது முன்னோர்களை நாம் குறை வாக மதிப்பிட முடியாது என்று கூறிய சார்லோட் ராபர்ட்சன், உடல் உறுப்பு களை வெட்டி அறுவை சிகிச்சை செய்ய மனித உடற்கூறியல், அறுவை சிகிச்சை, போதிய தொழில்நுட்பம் மற்றும் விரிவான அறிவு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை மிக வும் அவசியம் என்று தெரிவித்தார். "தற்போது உறுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து தரப்படுகிறது, கிருமி நீக்கப்பட்ட சூழல் இருக்கிறது. ரத்தப் போக்கையும், வலியையும் கட்டுப் படுத்தும் வசதி இருக்கிறது. ஆனால் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த வசதியும் இல்லாமல் இந்த சிக்க லான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று பேராசிரியர் சார்லோட் ராபர்ட்சன் குறிப்பிட்டார்.

இந்த அறுவைச் சிகிச்சைக்கு எந்த வகையான கற்கருவிகள் பயன்படுத்தப் பட்டன என்பது பற்றி மலோனியும் அவரது சகாக்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn