சரியாக காலை 8.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை - நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும்.
கழகக் குடும்பத்தினர் நேரம் தவறாமல் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்ந்து 9.30 முதல் 10.30 மணி வரை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், "பெரியார் உலகம்" (திருச்சி சிறுகனூர்) அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறும்.
கழகத் தலைவர் தலைமையில்,
"சமூக நீதிக்கான சரித்திர நாயகர்"
மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
பங்கேற்று பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டி விழாப் பேருரை நிகழ்த்துவார்.
கழகக் குடும்பத்தினர் திரண்டு வாரீர்! வாரீர்!!
- தலைமை நிலையம்
No comments:
Post a Comment