பெரியார் உலகமயமாகிறார் : மண்டைச் சுரப்பை உலகு தொழும் மலேசியா நாட்டில் உள்ள கெடா, பினாங்கு மாநிலங்களில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

பெரியார் உலகமயமாகிறார் : மண்டைச் சுரப்பை உலகு தொழும் மலேசியா நாட்டில் உள்ள கெடா, பினாங்கு மாநிலங்களில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா

படம்: 1 மலேசியா நாட்டில் உள்ள கெடா மாநிலம் கூலிம் நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழாவில் பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்தார் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன். நிகழ்வில் தேசியத் தலைவர் அண்ணாமலை, தேசிய துணைத் தலைவர் பாரதி, கூலிம் கிளை தலைவர் டாக்டர் முரளி, துணைத் தலைவர் மாரிமுத்து, கெடா மாநில தலைவர் சு பாலன் குமரன், அறிவிப்பாளர் சரளா, கூலிம்கிளைச் செயலாளர் விக்டர், உதவி தலைவர் மனோகர், பட்டர் வொர்த்குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் எழுச்சி உரை ஆற்றினார் பெரியார் பிஞ்சுகளின் உரையரங்கமும் நடைபெற்றது. 18.9.2022 மாலை 4 மணி கூலிம் தமிழவேள்கோ. சாரங்கபாணி தமிழ் பள்ளி. படம் 2:  மலேசிய நாட்டின் ம. தி .க சார்பில் பினாங்கு மாநிலம் பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு போல் நடைபெற்றது. தேசிய தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மேனாள் மலேசிய நாட்டின் நிதி அமைச்சர் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் நிகழ்வை தொடங்கி வைத்து தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பான கருத்துக்களை பதிவு செய்தார் மாநில கழக பொருளாளர் குணாளன் வரவேற்புரையாற்றினார் செயலாளர் யோகேஸ்வரி ஏற்பாட்டு குழு தலைவர் நாராயணசாமி துணைத் தலைவர் மருதமுத்து தேசிய துணைத் தலைவர் பாரதி, தேசிய உதவி தலைவர் மனோகர், டத்தோ மரியதாஸ், பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, கெடா மாநில தலைவர் பாலன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா படங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தந்தை பெரியார் குறித்த பேருரை ஆற்றினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. (18.9.2022  காலை 9 மணி - பட்டர்வொர்த் தேவான் தத்தோ ஹாஜி அகமத் படாவி அரங்கம்).


No comments:

Post a Comment