Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தலைநிமிர்ந்த பெண்!
August 30, 2022 • Viduthalai

பாகிஸ்தானைச் சேர்ந்த 13 வயது அப்ஷீன் குல் என்ற பெண்ணுக்கு உடலில் மோசமான பிரச்சினை. அவரது கழுத்து ஒரு பக்கம் சாய்ந்து செங்கோணமாக இருக்கும். 10 மாதக் குழந்தையாக இருந்தபோது அக்கா வின் கையிலிருந்து தவறி விழுந்ததில், அவரது கழுத்து வளைந்துவிட்டது. அப்ஷீ னின் வாழ்க்கை தலைகீழானது.

அவரைப் பார்வையிட்ட மருத் துவர் சில மருந்துகளையும் கழுத்துக்கு கழுத்துப் பட்டை ஒன்றையும் தந்தார். இருப்பினும், அது வலியை மோச மடையச் செய்தது. கூடுதல் மருந்து களை வாங்கவும் வசதி இல்லை. அப் ஷீனுக்கு ஏற் கெனவே Cerebral Palsy எனும் பெருமூளை வாதம் இருந்தது. அவர் 6 வயதில்தான் நடக்கத் தொடங்கினார்... 8 வயதில் தான் பேச ஆரம்பித்தார்.

அவர் பள்ளிக்குச் செல்லவில்லை, நண்பர்களும் இல்லை. அப்ஷீன் 12 வயதுவரை வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது - வலியைத் தாங்கிய வாறு. 2017-ஆம் ஆண்டு முதல் அவரது கதை உலகளவில் பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் டில்லி யைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன், அப்ஷீனுக்கு உதவ முன்வந்தார்.

தண்டுவடம் திரும்பிக்கொண்ட தால் உண்டான கழுத்துக் குறைபாட் டைச் சரிசெய்வதற்கு அப்ஷீனுக்குச் சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் தேவைப் பட்டன. அறுவைச் சிகிச்சை யின்போது, அவரது இதயமோ நுரை யீரலோ செயலிழக்கும் அபாயம் இருந்ததாக மருத்துவர் குறிப்பிட்டதாக அஃப்ஷீனின் குடும்பத்தார் கூறினர். இவ்வாண்டு பிப்ரவரியில், அப்ஷீனின் கழுத்துக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 6 மணி நேர அறுவைச் சிகிச்சையில் அவரது மண்டை ஓடு தண்டுவடத் துடன் இணைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது.

அப்ஷீன் தற்போது சொந்தமாக நடக்கிறார்... பேசுகிறார்...சாப்பிடுகிறார்... நேரான கழுத்துடன். சிகிச்சை செய் திருக்காவிட்டால் அப்ஷீன் வெகுநாள் உயிருடன் இருந்திருக்கமுடியாது என்று மருத்துவர் கிருஷ்ணன் செய்தி யாளரிடம் சொன்னார். அப்ஷீனின் முகத்தில் ஏற்பட்டுள்ள புன்னகை யைக் கண்டு ஆனந்தமடைவதாகக் கூறுகின்றனர் அவரின் பெற்றோர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn