விருத்தாசலம் மாவட்ட மங்களூர் ஒன்றிய திரா விடர் கழக அமைப்பாள ரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு தோழர்
மு. நடராசன் (வயது 83) அவர்கள் மூப்பின் காரண மாக 28.8.2022 அன்று காலை முடிவெய்தினார் என்பதை அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.
அவரை அண்மையில் நடந்த அரியலூர் மாநாட் டிலும், சந்தித்து மகிழ்ந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும், கழக நண்பர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.8.2022
No comments:
Post a Comment