‘விடுதலை'யை நான் காதலிக்கிறேன். விடுதலை மீது எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. இதுவரையில் விடுதலைக்கு 600 சந்தாக்களை சேர்த்து வழங்கியிருக்கிறேன்.
விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆன நிலையில், 60,000 சந்தாக்கள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் 60 சந்தாக்கள் வழங்க வேண்டும் என கூறினார்கள். தற்போதுவரை 60 சந்தாக்களில் 54 சந்தாக்களை வழங்கியிருக்கிறேன். இந்த சந்தாக்களை பெறுவதற்காக நான் எங்கேயும் வெளியில் செல்லவில்லை வீட்டில் அமர்ந்துகொண்டு தொலைப்பேசியிலேயே கேட்டு வாங்கி இருக்கின்றேன் இந்த 54 சந்தாக்களில் மருத்துவர்கள் 5 பேர், பொறியாளர்கள் 4 பேர், ஆசிரியர்கள் 21 பேர், தலைமை ஆசிரியர்கள் 3 பேர், வழக்குரைஞர்கள் 2 பேர், பாதிரியார் ஒருவர் என இந்த சந்தாக்களை பெற்றிருக்கிறேன்.
"எழுபத்தி ஏழு வயது கிழவனாக பெற முடிந்த இந்த சந்தாவை இளைஞர்களே, தோழர்களே உங்களால் பெற முடியாதா? 60 ஆயிரம் சந்தாக்கள் என்பது மிக குறைவுதான் ஆனால் அதற்கு மேலும் நம் தலைவருக்கு வழங்க வேண்டும் அது தான் நாம் நம் தலைவருக்கு செய்யும் பெருமை" என்றார் புலவர் நாத்திக நம்பி. அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தார். (புதுச்சேரி கலந்துரையாடல், 16.8.2022)
No comments:
Post a Comment