திருச்சியில் மன்றல் ஜாதி மறுப்பு இணை தேடும் பெருவிழா தஞ்சையில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

திருச்சியில் மன்றல் ஜாதி மறுப்பு இணை தேடும் பெருவிழா தஞ்சையில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி. அமர்சிங், தஞ்சை மண்டல மகளிரணி தலைவர் கலைச்செல்வி அமர்சிங் ஆகியோர் தலைமையில், தஞ்சை நகர தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை நகர அமைப்பாளர், வன்னிப் பட்டு செ. தமிழ்ச்செல்வன், தஞ்சை நகர அமைப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில்... புதிய பேருந்து நிலையத்திலும் மற்றும் கல்லூரி மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் சிறப்பாக துண்டறிக்கையை வழங்கப்பட்டது. "ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா, பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் ஒருங்கிணைக்கும் மன்றல் ஜாதி மறுப்பு இணை தேடும் பெருவிழா திருச்சியில் மிக சிறப்புடன் நடைபெற இருக்கிறது. வாய்ப்புள்ள அனைத்து பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்" என்று அத்துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment