குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்கள்

புதுடில்லி, ஆக. 4- குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை: 

குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமைப் படுத்த வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குரங்கம்மை பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும். சுற்றுச்சூழல் சுகாதாரத்திற் காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குரங்கு அம்மை நோயை  தடுக்க செய்யக் கூடாதவை:

குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ளக் கூடாது. குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம். குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.

மேலும் குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.


No comments:

Post a Comment