ராகுல்காந்தி நடைப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

ராகுல்காந்தி நடைப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

சென்னை, ஆக. 31- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ள நடைப் பய ணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7 ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்ப தாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரி வித்தார். 

ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங் குகிறார். கன்னியாகுமரியில் உள்ள காந்தியார் நினைவிடத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் 'தேசிய கொடி'யை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். 

அன்றைய தினம் கன்னியாகுமரி யில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ராகுல்காந்தி நடைபயணம் மேற் கொள்ளும் ஒவ்வொரு நாளும் 2 கூட்டணி கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியோடு 10 நிமிடம் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளார்கள். அதன்படி, ராகுல்காந்தி தமிழ்நாட்டில் இருக்கும் 4 நாள்களிலும் தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் நடை பயணத்தில் பங்கேற்று ராகுல்காந் திக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய மக்களை பிரித்தாள நினைக் கும் ஆர்.எஸ்.எஸ். சனாதன சித்தாந் தத்தால் அம்பேத்கர் இயற்றிய அர சியல் சாசன சட்டத்திற்கும், அதில் முதன்முதலில் காமராஜரால் இட ஒதுக்கீட்டுக்காக திருத்தம் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ராகுல்காந்தி மக்களிடம் எடுத்துரைக்க இருப்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம்.

மேலும் தவறான பொருளாதார கொள்கை, விவசாய கொள்கை, தாறுமாறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலைவாய்ப்பின்மை, விவசாயி களின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட வில்லை, கருப்பு பணத்தை மீட்டு அனைத்து குடிமக்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை. இவற்றையெல்லாம் மக் களிடம் எடுத்து கூறி இளைஞர்களை, பெண்களை திரட்ட, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற் காகவே ராகுல்காந்தி இந்த நடை பயணத்தை மேற்கொள்கிறார். 

கண் பார்வையற்றோரும் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடக்க இருக் கிறார்கள். மேலும், செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபயணம் தொடங்கும் போது குமரி அனந்தன் கதர் ஆடையை ராகுல்காந்திக்கு அணி வித்து வாழ்த்தி அனுப்பி வைக்கிறார். 

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், காங்கிரஸ் மூத்த தலை வர் குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு, பழுத்த மட்டை மரத்தில் இருந்து கீழே விழுவது இயற்கை. மரம் பழுத்து குலுங்குகிறபோதுதான் பறவைகள் இருக்கும். மரத்தில் இந்த சீசனில் பழம் இல்லாததால் சில பற வைகள் பறந்து செல்கின்றன என்று கே.எஸ்.அழகிரி பதில் அளித்தார். 

பேட்டியின் போது, அகில இந் திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் கே.ராஜூ, தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, மக்களவை உறுப்பினர் திருநாவுக் கரசர் உள்ளிட்டோர் உடன் இருந் தனர்.

No comments:

Post a Comment