மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்

இந்திய கம்யூ. பொதுச் செயலர் டி.ராஜா

புதுச்சேரி,ஆக.19-   மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை (17.8.2022) தொடங்கியது. மாநிலச் செயலர் அ.மு.சலீம் தலைமை வகித்தார்.

கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா பேசியதாவது: 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அக்.14-ஆம் தேதி தொடங்கி அக்.18 வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களி லும் மாநாடு நடைபெற்று வருகிறது. நாட்டின் ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப் படும்.

ஒன்றிய பாஜக அரசின் செயல் பாடுகளால், இன்றைய நிலையில் நமது நாடு அரசியல், பொருளா தாரம், சமூகம் என பன்முக நெருக் கடிகளைச் சந்தித்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக இவர்கள் போராடியதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத் துகின்றனர். காந்தி, நேரு, பகத்சிங் போன்ற தலைவர்களும், எண்ணற்ற இடதுசாரிகளும்தான் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வர்கள்.

பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டம் சீர்குலைந்துள்ளது. நமது இந்திய அரசு, மதச் சார்பற்றும், கூட்டாட்சியுடனும், அனைத்து மக்களின் நலனைபேணுவதாகவும் இருக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டம் எடுத்துரைக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு சமூக நல்லிணக்கத்தை துளைத்து ஜாதி, மத மோதல்களை உருவாக்கி வருகிறது. நமது நாட்டில் இந்துராஷ்டிரம் அமைந்தால் பேரி டர் என அம்பேத்கர் சொன்னதை, இப்போது செயல்படுத்துகின்றனர்.

செல்வந்தர்களுக்கு துணை நிற்கிறது

ஜாதிய ஆதிக்கத்தில் ராஜஸ்தா னில் பழங்குடியின சிறுவன் தாக்கப்பட்ட நிகழ்வு பெரும் கொடுமை. ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் வழிகாட்டுதலில், இதுபோன்ற சனாதனக் கொள்கையை பாஜக தூக்கிப்பிடிக்கிறது. நாடு பொரு ளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினிச் சாவில் முன்னிலை என்ற நிலைக்கு நாடு செல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு செல்வந்தர்களுக்கு துணை நிற்கிறது.

ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, கருப்புப் பணம் மீட்பு, மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துதல் போன்ற பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.

ஒன்றுபட வேண்டும்

பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன. ஒற்றை ஆட்சியை கொண்டுவர முயல்கின்றனர். இந்தச்  சூழலில் நாடு, ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறைகள், அரச மைப்புச் சட்டம் ஆகியவற்றை காப்பாற்ற, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றி ணைய வேண்டும். இடதுசாரிகள் வலிமை பெற வேண்டும்.

பீகாரில், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு நிதீஷ்குமார் வெளியேறி ஆட்சியமைத்தது நாடு முழுவதும் எழுச்சியை உருவாக் கியது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஆளுநர் மூலம், மாநில அரசைப் புறக்கணித்து, ஒன் றிய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment