வல்லம், ஆக. 17- வல்லம், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பெரியார் திறனறிவுப் போட்டியை முன்னிட்டு 12.8.2022 அன்று முதலா மாண்டு மாணவ, மாண விகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கழிவுப் பொருட்களிலி ருந்து கலைப் பொருட்கள் தயாரித்தல் ஆகிய போட் டிகள் நடைபெற்றன.
இக்கல்லூரியின் முதலாமாண்டு கணினியியல் துறை மாணவர் செல்வன் எஸ்.குருசச் சிந் தர் செங்கல்லில் செதுக் கிய பெரியாரின் உருவம் அனைவரின் கண்ணை யும், கருத்தையும் கவர்ந் தது. பெரியாரின் உருவத்தை செங்கல்லில் அழகாக வடிவடிமைத்து செதுக் கிய மாணவர் எஸ்.குருசச் சிந்தரின் திறமையை இக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீர மணி அவர்கள் பாராட் டினார்.
இந்நிகழ்ச்சியில் இப் பாலிடெக்னிக் கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், துறைத் தலை வர்கள் மற்றும் பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment