Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிரதமரின் வாக்குறுதிகள் என்னாச்சு? - காங்கிரஸ் கண்டனம்
August 16, 2022 • Viduthalai

புதுடில்லி, ஆக.16 8 ஆண்டுகால வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாததால் பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.  பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியின் உரை முதிர்ச் சியுடன் இருக்கும் என்றும், தனது 8 ஆண்டுகால ஆட்சியின் வாக்குறுதிகள் பற்றி பேசுவார் என்றும் மக்கள் எதிர் பார்த்தனர். அதாவது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, அனைவருக்கும் வீடு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுக்கு பதிலை எதிர்பார்த் தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாமல், அவர் நாட்டை கைவிட்டு விட்டார். அவரது உரை ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமரின் பேச்சில் எந்த உற்சாகமும் இல்லை. அவர் களைத்துப் போய்விட்டார். அவரது வார்த்தைகளே அவரை துரத்திக்கொண்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டு தூக்கம் வராமல் தவிக்கிறார். பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றியும் பேசி இருக்கிறார். அவர் பா.ஜனதாவின் உள்விவகாரத்தை பேசி இருப்பதாக கருதுகிறோம். ஏனென்றால், பா.ஜனதா தலைவர்கள் பலருடைய மகன்கள் போதிய அனு பவம் இல்லாவிட்டாலும் முக்கிய பதவி வகித்து வருகிறார்கள்.

ஒன்றிய உள்துறை அமைச்சரின் மகன் கிரிக்கெட் சங்கத்தில் உயர் பதவி வகிக்கிறார். ராஜ்நாத்சிங்கின் மகனும் அரசியலில் இருக்கிறார். எனவே, சொந்த அமைச்சர்களையே பிரதமர் தாக்கி இருப்பதாக கருதுகிறோம். சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜனதா எந்த பங்கும் வகிக்கவில்லை. எனவே, வரலாற்றை திருத்தி அமைக்க முயற்சிக்கிறது என்று அவர் பேசினார். 

பிரதமர் மோடி தனது உரையில் பெண் சக்தி பற்றியும் பேசி இருந்தார். ஆனால், கள நிலவரம் முரணாக இருப்பதாக கண்டனம் எழுந்துள்ளது. சமூக ஆர்வலர் அகஞ்சா சிறீவஸ்தவா, அகில இந்திய முற்போக்கு மாதர் சங்க உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:- பெண்கள் பாதுகாப்பு முக்கியம். 

ஆனால், 'நிர்பயா' நிதியைப் பயன்படுத்தி, பெண்கள் பாது காப்புக்கான நடவடிக்கைகள் எடுக் கப்படவில்லை. நி நிலையறிக்கையில் பெண்களுக்கான ஒதுக்கீடு 0.71 சதவீ தத்தில் இருந்து 0.66 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தினமும் நடக் கின்றன. பெண்கள் தொடர்பான தனது கட்சியினரின் செயல்பாடுகளை மோடி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn