அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 'விடுதலை' சந்தா ரூ.50,000 வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 'விடுதலை' சந்தா ரூ.50,000 வழங்கினார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 'விடுதலை' ஆசிரியராக 60 ஆண்டுகள் பணிக்கு நன்றி செலுத்தும் வகையில் 60,000 சந்தாக்கள் திரட்டும் பணி தாராபுரம் மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிராவிட நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் அவர்கள் விடுதலை சந்தா ரூ.50,000த்தை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தாராபுரம்மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகரத் தலைவர் மணி, அலங்கியம் ஒன்றியத்தலைவர் நாத்திக.சிதம்பரம், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், தாராபுரம் வீராச்சாமி ஆகியோரிடம் மகிழ்வுடன் வழங்கினார். (06-08-2022).


No comments:

Post a Comment