Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவு
August 27, 2022 • Viduthalai

புதுடில்லி, ஆக.27-  அரசியல் கட்சிகள் தேர்தல் பரப் புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.  

தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளி யிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் அஷ்வினி  உபாத் யாய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை அமர்வு விசா ரித்து வந்தது. இந்நிலையில், வியாழனன்று நடைபெற்ற அமர்வில் இவ்வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப் படுவதாக தலைமை நீதிபதி ரமணா கூறியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று (26.8.2022) நடைபெற்ற விசாரணையின்போது, இவ்வழக்கில் கட்சிகள் எழுப்பும் பிரச்ச னைகளுக்கு விரிவான விசாரணை தேவைப் படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இதில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் என்ன? நீதிமன்றம் மூலமாக நிபுணர் குழுவை நியமிப்பதில் உள்ள சாதக - பாதகங்கள் போன்ற அடிப்படை விஷயங்கள் தீர்மா னிக்கப்பட வேண்டும் என்றும் ரமணா குறிப்பிட்டார். 

இந்தப் பிரச்சினையில் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான மனுதாரர்கள் குறிப்பிட்டிருப்பது போல, இலவசங்களை அறிவிப்பது என்பது ஓர் ஊழல் நடை முறை அல்ல என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். எனினும் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் நிதி பொறுப்பு ஏதும் இல்லாமல் அறிவிப்புகள் வெளியிடு வது பற்றி கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இலவசங்கள் அறிவிப்புக்கு தடைகோரும் வழக்கினை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கூறிய  தலைமை நீதிபதி ரமணா, வழக்கு விசார ணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்  ளார். இந்த வழக்கினை இனி நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரிக்கும் என்று தெரிகிறது.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn