இந்தியாவில் 18,738 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

இந்தியாவில் 18,738 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி, ஆக. 8- இந்தியாவில் இன்றைய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (8.8.2022) வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 738 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்று முன் தின (6.8.2022) பாதிப்பான 20 ஆயிரத்து 551 மற்றும் நேற்றைய பாதிப்பான 19 ஆயிரத்து 400அய் விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 206 கோடியே 21 லட்சத்து 79 ஆயிரத்து 411 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment