Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் சாமியார் சொன்னதால் 18 மாத குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம்
August 30, 2022 • Viduthalai

லக்னோ, ஆக. 30- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்திற் குட்பட்ட மலக்பூர் கிராமத்தில் 18 மாத குழந்தையை நரபலி கொடுக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது.

தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துபோகின்றன என்பதற்காக, சாமி யாரின் பேச்சைக் கேட்டு உறவுக்காரரின் குழந்தையையே நரபலி கொடுத்து கொன்ற அவலம் நடந்துள்ளது.

அக்கிராமத்தில் ரமேஷ் குமார் என்ப வரது 18 மாத ஆண் குழந்தையை திடீரென காணவில்லை. இதையடுத்து குழந்தை யைப் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குழந்தையின் உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை என்று தெரியவந்தது.  ரமேஷ் குமாரின் சகோதரருக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் பிறந்த உடன் இறந்துள்ளன. இதையடுத்து சகோதரரின் மனைவி சரோஜா தேவி கர்ப்பமடைந் துள்ளார். இந்த குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என நினைத்து இந்த தம்பதியினர் சாமியார் ஒருவரைச் சந்தித் துள்ளனர்.

அந்த சாமியார், குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க வேண்டும் என கூறி யுள்ளார். இதையடுத்து அவர்கள் தனது தம்பி குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் சரோஜா தேவி அவர் கணவரைக் கைது செய்துள் ளனர். குழந்தை நலமாகப் பிறக்க 18 மாத குழந்தையைப் நரபலி கொடுத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn