அய்.ஏ.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு செப்.16-இல் முதன்மைத் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

அய்.ஏ.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு செப்.16-இல் முதன்மைத் தேர்வு

சென்னை,ஆக.5- அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்.

 இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 4-ஆம் தேதி நாடு முழுவதும் 77நகரங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவு இன்னும் வெளியாகாத சூழலில், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு குறித்த அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 24, 25-ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை  www.upsc.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment