டில்லி முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம் : டில்லி ஆளுநர் நிராகரிப்பாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

டில்லி முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம் : டில்லி ஆளுநர் நிராகரிப்பாம்!

புதுடில்லி. ஜூலை.22 உலக நகரங்கள் மாநாடு சிங்கப்பூரில் ஆகஸ்ட் 2,3 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ‘டில்லி மாடல்’ என்ற தலைப்பில் உரையாற்ற முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவா லுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவாலின் அதி காரப்பூர்வ சிங்கப்பூர் பயணத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி கோரி கோப்பு அனுப்பி வைக்கப் பட்டது.

ஆனால், கடந்த ஜூன் 7-ஆம் தேதி அனுப்பிய கோப்புக்கு அனு மதி வழங்குவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக கெஜ்ரிவால் புகார் கூறினார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஒருவர் பங்கேற்பதை திட்டமிட்டு நிறுத்துவது நாட்டு நலனுக்கு எதிரானது” என்று கூறியிருந்தார். இந்நிலையில் கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான கோப்பை துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா திருப்பி அனுப்பி யுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் தனது ஆலோசனையில், “சிங்கப்பூர் மாநாடு நகர்ப்புற நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. இப்பிரச்சினைகள், டில்லி அரசு தவிர மாநக ராட்சி, டில்லி வளர்ச்சி ஆணையம், டில்லி மாநகர கவுன்சில் போன்ற பல்வேறு அமைப்புகளால் தீர்க்கப்படுபவை. இம்மாநாடு, டில்லி அரசின் பிரச்சினைகள் குறித்த பிரத்யேக களம் அல்ல. இந்த மாநாடு மேயர் களுக்கானது. இதில் முதலமைச்சர் பங்கேற்பது பொருத்தமற்றது. எனவே மாநாட்டில் பங்கேற்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.ஆளுநர் நிராகரித்ததை தொடர்ந்து, அரசியல் அனுமதி கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். கெஜ்ரிவாலின் பயணம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் என்பதால் ஒன்றிய அரசு அனுமதி வழங்கும் என நம்புகிறோம் என்று துணை முதலமைச்சர்  மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.


No comments:

Post a Comment