சென்னை, ஜூலை 19 வீடுகளுக்கான மின் கட்டணத்தை அதிகபட்சம் 27 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
இது தொடர்பாக அவர் சென் னையில் நேற்று (18.7.2022) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2011- - 2012இல் ரூ.18,954 கோடியாக இருந்த மின் வாரிய நிதியிழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2021 மார்ச் 31 வரை ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது.
2021- - 2022இல் இருந்து மின் வாரிய நிதியிழப்பை 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழ்நாடு அரசு தற்போது உறுதியளித்தைப்போல, கடந்த காலங்களில் எந்த உறுதியும் வழங்காததால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய கட் டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டது.
இதனால் 2011- - 2012இல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகத்துக்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன், தற்போது 3 மடங்கு அதிகரித்து, ரூ.1.59 லட்சம் கோடியாக உயர்ந் துள்ளது.
மின் விநியோகக் கடன்களை 75 சதவீதம் எடுத்துக்கொண்டு, அதன்மூலம் அசல் மற்றும் வட்டியைக் குறைத்து, நிதி நிலை மையைச் சீராக்குவதே ஒன்றிய அரசு செயல்படுத்திய உதய் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
எனவே, 8 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு மின் கட்ட ணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இதன்படி, 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 கட்டணம், அதாவது 26.73 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.
300 யூனிட் வரை பயன்படுத்து வோருக்கு ரூ.72.50ஆம் (15.30 சத வீதம்), 400 யூனிட் வரை பயன் படுத்துவோருக்கு ரூ.147.50ஆம் (7.94 சதவீதம்), 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50ஆம் (4.46 சதவீதம்), 600 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.155ஆம் (1.32 சதவீதம்), 700 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275ஆம் (0.83 சதவீதம்), 800 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.395ஆம் (0.53 சதவீதம்), 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565ஆம் (0.35 சதவீதம்) உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உயர் மின்னழுத்தப் பிரிவில், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 40 காசுகளும், ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 65 காசுகளும், வணிகப் பிரிவுகளுக்கு 50 காசு
களும் உயர்த்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.
எனினும், 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிப் பாட்டுத் தலங்களுக்கு வழங்கப் பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான மானியத்தை நுகர்வோர் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகைக்கு விடப் பட்டதை தவிர, மற்ற கூடுதல் இணைப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 கட்டணம் வசூலிக்கப்படும். வீடுகளுக்கு நிலைக்கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை ரத்து செய் யப்படுகிறது. இதன் மூலம் 2.28 கோடி நுகர்வோர் பயனடைவர்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடு கையில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு அனுமதிகோரி, தமிழ்நாடு மின் சார ஒழுங்குமுறை ஆணையத் திடம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆணையம் ஒப்புதல் வழங்கிய வுடன் கட்டண உயர்வு அமல் படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
No comments:
Post a Comment