மதவெறியைத் தூண்டும் டுவிட்டர் பதிவு பிஜேபி ஆசாமி கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

மதவெறியைத் தூண்டும் டுவிட்டர் பதிவு பிஜேபி ஆசாமி கைது!

சென்னை, ஜூலை 11- மதவாத வெறுப்பை தூண்டும் விதமாக டிவிட்டரில் பதிவு செய்த பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார்.  தமிழக பாஜ செயற்குழு உறுப்பினரான சவுதாமணி கடந்த ஜனவரி மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் மதவாத வெறுப்பை தூண்டும் விதமாக ஒருவர் பேசிய காணொலியை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சவுதாமணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை கேட்டு சவுதாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.  இதைதொடர்ந்து சவுதாமணியை 9.7.2022 சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.


No comments:

Post a Comment