டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஆரியம், திராவிடம் என்பது பூகோள ரீதியானதே தவிர, இனத்தை அடிப்படையாக கொண்டதல்ல, ஆளுநர் ஆர்.என்.ரவி வியாக்கியானம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பிரதமர் அரசியலமைப்பு மற்றும் மக்கள் நலன் பற்றி பேச வேண்டும். மதவாதத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பிரதமரின் பேச்சுக்கு பதிலடி.
கேரள மேனாள் அமைச்சர் சஜி செரியனின் அரசி யல் சாசனத்திற்கு எதிரான கருத்துகள் கோல்வால்கரின் சிந்தனை தொகுப்புகள் (பன்ச் ஆஃப் தாட்ஸ்) புத்தகத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் போலவே இருப்பதாக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் பேச் சுக்கு ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைமை அவருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக வி டி சதீசன் பதிலளித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே, குறுகிய கால ராணுவ சேவை செய்தவரால் சுடப்பட்டுள்ளார். சர்ச்சைக் குரிய அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் சாத்தியமான ஆபத்துக்களை இந்தக் கொலை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது என்கிறது திர்னாமுல் காங்கிரஸ் கட்சி.
தி டெலிகிராப்:
பாடப்புத்தகத்தில் மேனாள் பிரதமர் நேரு, முகாலாய அரசர்கள் பற்றிய குறிப்புகள் நிபுணர்களின் ஆலோ சனையின்படியே நீக்கப்பட்டதாக என்.சி.இ.ஆர்.டி. கூறியுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment