அரசுத்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை, ஜூலை 9- நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத் துக்குள் அமல்படுத்த வேண் டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறி வுறுத்தி, தலைமைச் செயலா ளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசுக்கு அறி வுறுத்தி யிருந்தது. மேலும், நீதிமன்ற உத்த ரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவு களை குறித்த காலத்தில் அமல் படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறை யீடு செய்ய வேண்டும் என வும் அனைத்து துறை அதி காரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப் பியுள்ளதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரை ஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் வியாழனன்று (ஜூலை 7) தெரிவித்தார்.
மேலும், அந்த கடித நக லையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண் டாரி, நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.
No comments:
Post a Comment